Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

தருமபுரி மாவட்டத்தில் - பாதுகாப்பு பணியில் 350 முன்னாள் ராணுவ வீரர்கள் :

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி எஸ்பி அலுவலக வளாகத்தில் நடந்தது.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் பாது காப்புப் பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் 350 பேர் பங்கேற்கவுள்ளனர்.

சட்டப் பேரவை பொதுத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் விருப்பக் கடிதம் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர்கள் 350 பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று தருமபுரி எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்தனர். அவர்களிடம் முன்னாள் படை வீரர் சான்று உள்ளிட்ட அவர்களது சான்றுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டன.

பின்னர் அவர்களுக்கு சட்டப் பேரவை தொகுதி வாரியாகபணி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒதுக்கீடு கடிதம் வழங்கப்பட்டது.

அதேபோல, ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 300 வீரர்கள் நேற்று பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்று வாக்குச் சாவடி வாரியாக பணி ஒதுக்கீடு கடிதம் பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x