Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை - பறக்கும் படை சோதனையில் ரூ.88.62 லட்சம் பறிமுதல் :

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டனர்.

இதில், இதுவரை பாலக்கோடு தொகுதியில் ரூ.10 லட்சத்து 28 ஆயிரத்து 450, பென்னாகரம் தொகுதியில் ரூ.9 லட்சத்து 45 ஆயிரத்து 830, தருமபுரி தொகுதியில் ரூ.34 லட்சத்து 29 ஆயிரத்து 970, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ரூ.7 லட்சத்து 52 ஆயிரம், அரூர் (தனி) தொகுதியில் 27 லட்சத்து 6 ஆயிரத்து 270 என மொத்தம் ரூ.88 லட்சத்து 62 ஆயிரத்து 520 பறிமுதல் செய்தனர்.

அதேபோல, 5 தொகுதிகளிலும் நகை, துணி மற்றும் கொடி வகைகள், தேர்தல் தொடர்பான காலண்டர், மது பாட்டில்கள் என ரூ.67 லட்சத்து 94 ஆயிரத்து 998 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x