Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

கும்பகோணம், திருவையாறு தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு :

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் நேற்று வாக்கு சேகரிக்கிறார் திருவையாறு தொகுதி அமமுக வேட்பாளர் வேலு.கார்த்திகேயன்.

கும்பகோணம்: கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் பாலமுருகன் நேற்று கும்பகோணம் மீன் சந்தை, காய்கறிச் சந்தை, தூய அலங்கார அன்னை பேராலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதேபோல, திருவையாறு தொகுதி அமமுக வேட்பாளர் வேலு.கார்த்திகேயன் மைக்கேல்பட்டி, பூதலூர் ஆகிய பகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க, ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்க அமமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கேட்டு, அவர் வாக்கு சேகரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x