Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

திருச்சி மாவட்டத்தில் - அதிமுக வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரம் :

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கடைசி நாளான நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மணப்பாறை தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக போட்டியிடும் ஆர்.சந்திரசேகர், துவரங்குறிச்சி கடை வீதி, பேருந்து நிலையம், பூதநாயகி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு, துவரங்குறிச்சி அருகேயுள்ள சோதனைச் சாவடி பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், “மாநகராட்சி 17, 18, 19 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். பின்னர், 9-வது வார்டு பகுதியில் வாக்குச் சேகரித்துவிட்டு, மாலையில் மலைக்கோட்டை மலைவாசல் பகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

முசிறி தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக போட்டியிடும் எம்.செல்வராசு, முசிறி அக்ரஹாரம் கிருஷ்ணன் கோயிலில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கி, முசிறி கைக்காட்டி பகுதியிலும், ரங்கம் தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், இனாம்குளத்தூர், சமுத்திரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு, மாலையில் ரங்கம் ராஜகோபுரம் பகுதியிலும், மண்ணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர் மு.பரஞ்ஜோதி, நெ.1 டோல்கேட் பகுதியில் வாக்குச் சேகரிப்பைத் தொடங்கி, மண்ணச்சநல்லூரிலும் தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

இதேபோல, திருச்சி திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் ப.குமார், பால்பண்ணை அருகேயுள்ள வேங்கூர் சாலையில் உள்ள வெள்ளைப் பிள்ளையார் கோயிலில் தொடங்கி திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலும், திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் வி.பத்மநாதன், வழிவிடு முருகன் கோயில் அருகே பிரச்சாரத்தைத் தொடங்கி மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகிலும் தங்களின் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x