Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM
பத்மநாபபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கம் பொன்மனை பகுதியில் இருந்து நேற்று தனது இறுதிக்கட்ட பிரச் சாரத்தை தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அதிமுக அரசு தமிழகத்தில் சிறந்த ஆட்சியைத் தந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு இலவசதிட்டங்கள், பொங்கலுக்கு ரூ.2500 மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொங் கல் தொகுப்பு, ஆடைகள் வழங்கப் பட்டன.
பத்மநாபபுரம் தொகுதியில் முடங்கிக்கிடக்கும் தொழில்களை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வேன். இத்தொகுதியில் வீடு இல்லாத ஏழைகளுக்கும், புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கும் அரசு நிதி உதவித் திட்டத்தின் மூலம், தரமான வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT