Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

ஆம்பூர் அருகே பணம், புடவைகள் பறிமுதல் :

ஆம்பூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட சேலைகள், பணம் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஆலாங்குப்பம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது, அதில் 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பதும் அதற்கான ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்தது. இதையடுத்து கார் உரிமையாள ரிடம் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, ஆம்பூர் புறவழிச் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.1.37 லட்சம் மதிப்பிலான புடவைகள் இருப்பது தெரியவந்தது.

இதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அந்த புடவைகள் அனைத்தும் பறிமுதல் செய்து, ஆம்பூர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஆனந்த கிருஷ் ணனிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x