Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

ஏப்ரல் - ஜூனில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் :

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் வெப்பநிலை வழக்கத்தை விடவும் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக வெப்ப அலை ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இவ்வாண்டு மார்ச் மாதத்திலே பல இடங்களில் வெப்ப அலை பதிவாகி இருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

குறைவான மழைப்பொழிவு, வறண்ட காற்று காரணமாக வெப்ப அலை சீக்கிரமாக ஏற்பட்டுவிட்டதாக அறிவியலாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை அன்று தலைநகர் டெல்லியில் வெப்ப நிலை 40.1 டிகிரி செல்சியஸைத் தொட்டது. இது அங்கு கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வெப்பநிலை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு - மத்தியப் பகுதிகளில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் வெப்பநிலை வழக்கத்தைவிட 0.37 டிகிரி செல்சியஸ் முதல் 0.62 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x