Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

சிங்காநல்லூர் தொகுதியில் அடுக்குமாடி குறுந்தொழில் பேட்டை அமைக்கப்படும் : திமுக வேட்பாளர் நா.கார்த்திக் உறுதி :

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நா.கார்த்திக், தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பீளமேடு, தண்ணீர் பந்தல் சாலை, இந்து மாநகர், லட்சுமி கார்டன், பவுண்டரி லே-அவுட், செங்காளியப்பன் நகர், கருப்பண்ணன் கவுண்டர் லேஅவுட், ஜெய் நகர், பி.கே.கார்டன் ஒன்று, இரண்டு, மூன்றாவது வீதிகள், சாரமேடு, ஜி.எம்.நகர் உள்ளிட்ட இடங்களில் அவர் நேற்று பிரச்சாரம் செய்தார். சாரமேடு, ஜி.எம்.நகர் பகுதிகளில் நா.கார்த்திக்குக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக பிரச்சாரத்தின் போது, திமுக வேட்பாளர் நா.கார்த்திக் பேசும்போது, ‘‘அதிமுக ஆட்சிக்காலத்தின் போது, மக்களுக்கு தேவையான திட்டப்பணிகளை அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை. நான் வெற்றி பெற்றால், இத்தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவுபடுத்தி முடிக்கப்படும். பீளமேட்டில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அதிமுக-பாஜக கூட்டணியின் தவறான நிர்வாகத்தால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் தொழில்துறையினருக்காக அடுக்குமாடி குறுந்தொழில் பேட்டை அமைக்கப்படும்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x