Published : 03 Apr 2021 03:15 AM
Last Updated : 03 Apr 2021 03:15 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் நேற்று மதியம் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், டி.லூர்துசாமி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர், உடனடியாக அங்கு சென்று, விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துகொண்டிருந்த கீழவாசல் பாலோபநந்தவனத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் குமார் மகன் கார்த்திக்(36) மற்றும் முள்ளுக்காரத் தெரு முருகன் மனைவி சக்திகொடியம்மாள்(29) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்களிடமிருந்து ரூ.25,500 ரொக்கம் மற்றும் பெயர், செல்போன் எண்கள் எழுதப்பட்ட ஒரு நோட் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கீழவாசல் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அங்கு, இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT