Published : 02 Apr 2021 03:11 AM
Last Updated : 02 Apr 2021 03:11 AM
தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டுமென போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது: கரோனா பாதிப்பு மீண்டும்அதிகரிக்க தொடங்கியுள்ளதால், போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு ஒரு முறை மட்டுமே முகக் கவசம்மற்றும் கையுறை வழங்கப்பட்டுள்ளது. மாற்று முகக்கவசம், கையுறைவழங்கப்படவில்லை.
பேருந்து நிலையங்கள், பணிமனைகளில் கழிவறை, ஓய்வறைபோன்றவைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென்கிற அரசின் வழிகாட்டுதலைநடைமுறைப்படுத்துவதில்லை. கரோனா பாதிப்பு சிகிச்சைக் காலத்துக்கான சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும்.
சிகிச்சை பலனின்றி மரணம் அடையும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள சிறப்பு காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT