Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM
இரவு நேரத்தில் ரயில்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை சார்ஜ் போடுவதற்கு ரயில்வே துறை தடை விதித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு கடந்த 13-ம் தேதி இரவு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 2 மணியளவில், ரயிலில் இருந்த சார்ஜ் நிலையத்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, அங்கு வந்த ரயில்வேபாதுகாப்புப் படையினர் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், செல்போனை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் சார்ஜ் போட்டதால் தீ விபத்து நேரிட்டது தெரியவந்தது. இதேபோல, நாடு முழுவதும் பல்வேறு ரயில்களில் இரவு நேரத்தில் சார்ஜ் நிலையங்களில் சிறு சிறு தீ விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாக மாறி வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, ரயில்களில் உள்ள சார்ஜ் நிலையங்களை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அணைத்து வைக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே, இரவு நேர ரயில்பயணங்களில் இனி செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT