Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM
மதுரை சோழவந்தான் தொகுதியில் 3 பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழு தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
நேற்று காலை 10 மணிக்கு சோழவந்தான் ரயில்வே கேட் அருகில் பறக்கும் படை அதிகாரி வாசுகி தலைமையில் அலுவலர்கள் வாகனச்சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் சோதனையிட்டு ரூ.70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், உசிலம்பட்டி கவனம்பட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் தீபன் (26) என்பதும், அரிசி வியாபாரியான அவர் அரிசி விற்ற பணத்தை வசூலித்து விட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT