Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை மதுரையிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் புறப்பாடாகி மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நேற்று மாலை மீனாட்சிஅம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதியுலா நடந்தது. தொடர்ந்து இன்று கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT