Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM

வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் அட்டை விநியோகம் :

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அஞ்சல் அட்டை விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேர்தல் நாளான ஏப்ரல் 6-ம் தேதி வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட அஞ்சல் அட்டையில் அச்சடிக்கப்பட்டுள்ளது . புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அஞ்சல் ஊழியர்கள் மூலம் விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகள் விநியோகிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி 2 தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x