Published : 01 Apr 2021 03:17 AM
Last Updated : 01 Apr 2021 03:17 AM
காட்பாடியில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.
காட்பாடி தாராபடவேடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாந்தி (60). இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.
இதுகுறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, மூதாட்டியுடன் வசித்து வந்த அவரது பேரன் அஜீத்குமார் (20) என்பவர் மது குடிக்க பணம் தராததால் சாந்தியை கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையில் அஜீத்குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. வேலூர், சித்தூர், திருவலம் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் அஜீத்குமாரை தனிப்படை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், காட்பாடி அடுத்த கழிஞ்சூர் ஏரிக்கரை அருகே பதுங்கியிருந்த அஜீத்குமாரை தனிப்படை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அஜீத்குமார் மீது கொலை முயற்சி வழக்கு, சிறுமி பாலியல் துன்பு றுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT