Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு கரோனாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், “எனது தந்தைக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த நோய்த் தொற்றுக்கான சில அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளது.
எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முடிவு தெரியும் வரை எங்களை தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறோம். எங்களுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
பரூக் அப்துல்லா, கடந்த மார்ச் 2-ம் தேதி நகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். ஆனால் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT