Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய : மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கு ‘சீல்’ :

பொள்ளாச்சியில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கிவந்த மருத்துவப் பரிசோதனைக்கூடத்துக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவுறுத்தியுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி சில மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் இயங்குவதாக கிடைத்த தகவலின்பேரில், நகர் நல அலுவலர் கள் ராம்குமார், ராஜ்குமார் ஆகியோர் தலைமையில், கரோனா தொற்றுதடுப்புப் பணி முன்னோடி அலுவலர் விஜயகுமார் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து நகராட்சி அலுவலர்கள் கூறும்போது, ‘ ஐசிஎம்ஆரின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல், பொள்ளாச்சி புதிய திட்ட சாலையில் செயல்பட்ட ஆய்வகம், காமராசர் சாலையில் செயல்பட்ட ஆய்வகம் ஆகியவற்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மற்றொரு ஆய்வகத்துக்கு விதிமீறலுக்காக ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். சமூக இடைவெளியை பின்பற்றாத, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x