Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு :

ஆந்திர மாநிலம் விஜயநகரம் - விசாகப் பட்டினம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டி ருந்த அரசு பஸ் மீது எதிரே விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த மற்றொரு அரசு பஸ் மோதியது.

இது தவிர, விசாகப்பட்டினம் பஸ் மீது அதன் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மோதியது. 3 வாகனங்களும் பயங்கர வேகத்தில் மோதிக்கொண்ட இந்த விபத்தில், ஆந்திர அரசு பஸ் ஓட்டுநர்கள் இருவர், 3 பயணிகள் என 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 40 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x