Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM
ஆந்திர மாநிலம் விஜயநகரம் - விசாகப் பட்டினம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டி ருந்த அரசு பஸ் மீது எதிரே விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த மற்றொரு அரசு பஸ் மோதியது.
இது தவிர, விசாகப்பட்டினம் பஸ் மீது அதன் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மோதியது. 3 வாகனங்களும் பயங்கர வேகத்தில் மோதிக்கொண்ட இந்த விபத்தில், ஆந்திர அரசு பஸ் ஓட்டுநர்கள் இருவர், 3 பயணிகள் என 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 40 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT