Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

எடப்பாடி பழனிசாமி: மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைந்தவுடன் வீடில்லா மக்கள் அனைவருக்கும் சொந்தமாக நிலம் வாங்கி அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தரப்படும்

எடப்பாடி பழனிசாமி: மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைந்தவுடன் வீடில்லா மக்கள் அனைவருக்கும் சொந்தமாக நிலம் வாங்கி அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தரப்படும். தமிழகம் முழுவதும் 14 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன. வரும் காலங்களில் தமிழகத்தில் அனைவருக்கும் வீடு என்ற நிலையை உருவாக்குவோம்.

சீமான்: நாம் தமிழர் அரசின் பசுஞ்சோலைப் பள்ளிகளில் ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பில் சேரும் சிறுவர் சிறுமிகளின் தனித்திறமை என்ன என்பதைப் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கேட்டறிந்து அதுவே முதன்மைப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படும்; மற்றவை எல்லாம் துணைப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படும்.

கே.எஸ்.அழகிரி: இந்தியாவில் வேலையின்மை விகிதத்தில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலை மாற வேண்டுமா வாக்களிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு.

மு.க.ஸ்டாலின்: எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளருடன் நடந்து சென்று வாக்காளர்களிடம் ஆதரவு கோரினேன். மக்களின் ஆதரவும் ஆர்ப்பரிப்பும் திமுகவின் வெற்றியை உறுதி செய்கிறது. எடப்பாடி மட்டும் இல்லை; மொத்த தமிழகமும் திமுக ஆட்சியை எதிர்பார்க்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறும்; தமிழகம் வளம் பெறும்!

கமல்ஹாசன்: கொங்கின் சங்கநாதமாக சட்டமன்றத்தில் ஒலிப்பேன். கோவை தெற்குத் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத பிரச்சனைகளை உடனடியாகத் தீர்ப்பேன். அக்கறையற்ற அரசுகளால் நசிந்து போன கோவையின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மீட்டெடுப்பேன். வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன். வாக்களிப்பீர் டார்ச் லைட் சின்னத்திற்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x