Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

நுங்கம்பாக்கத்தில் உள்ள - டிபிஐ வளாகத்தில் தீ விபத்து :

நுங்கம்பாக்கத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்கக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், சில ஆவணங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை இயக்கக (டி.பி.ஐ) வளாகத்தில் செயல்பட்டு வரும் தொடக்க கல்வித் துறை இயக்கக கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் நேற்று அதிகாலை திடீரென கரும்புகை வெளியேறியது. அங்கிருந்த ஊழியர்கள் சிலர், கட்டிடத்தின் அருகில் சென்று பார்த்தபோது, கட்டிடத்துக்குள் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் எழும்பூர் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சில ஆவணங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x