Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

மீனம்பாக்கத்தில் ரூ.54 லட்சம் பறிமுதல் :

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, சென்னை மீனம்பாக்கம் சுரங்கப்பாதை அருகே மீனம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.54 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பழவந்தாங்கல் பகுதியில் உள்ள நகைக் கடையில் இருந்துபணத்தை கொண்டு வருவது தெரியவந்தது. ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, போலீஸார் பணத்தை கைப்பற்றி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் ரூ.54 லட்சத்தை பறிமுதல் செய்து, ஆலந்தூர் மண்டல தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x