Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் :

சிதம்பரத்தில் ரூ. 20 லட்சம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிதம்பரம் நகர போலீஸார் சிதம்பரம் மார்க்கெட் பகுதியில் நேற்று பல கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது சிதம்பரம் நகர காவல் நிலையம் பின்புறம் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் மான்சி( 40) என்பவரது கடையிலும், அடுக்குமாடி குடியிருப்பில் தனி வீடு எடுத்து அதில் புகையிலைப் பொருட்களை வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரிய வந்தது. ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடை உரிமையாளர் மான்சியை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x