Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

விபத்துகளில் இருவர் உயிரிழப்பு :

உசிலம்பட்டி அருகிலுள்ள பன்னியானைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி(45).

இவர், கடந்த 27-ம் தேதி செக்கானூரணியில் இருந்து ஆட்டோவில் சென்றபோது, சொக்கநாதபுரம் அருகே லாரி மோதியது. ஆட்டோ ஓட்டுநர் வேல்முருகன், அதில் பயணம் செய்த ஜெயலட்சுமி, ஜானகி ஆகியோர் காயமடைந்தனர். மூவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு ஜெயலட்சுமி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்தவர் இன்பராஜ் (27). இவர் தனது உறவினர் சந்தியாகுவுடன் வாடிப்பட்டியிலுள்ள மாதா கோயிலுக்கு கடந்த 28-ம் தேதி பாதயாத்திரை சென்றுள்ளார். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சன்னம்பட்டி பாலத்தில் பைக்கில் சென்ற அகமது(27) என்பவர் பாத யாத்திரை சென்றவர்கள் மீது மோதினார். இதில் இன்பராஜ் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x