Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் பாதிப்பு - கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 5 அம்ச திட்டம் : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியீடு

புதுடெல்லி

நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 5 அம்ச திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் மீண்டும் அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் இல்லாவிட்டாலும் கூட, 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 37 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளான நிலையில், தமிழகம், கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 1500-க்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து 2-வது நாளாக தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

இந்நிலையில் வேகமாக பரவி வருகிற கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு நேற்று காணொலி காட்சி வழியாக உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியது.

இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமை தாங்கினார். இதில் மகாராஷ்டிரா, குஜராத், ஹரியாணா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் பிஹார் ஆகிய 12 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாட்டின் 46 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ராஜேஷ் பூஷண் பேசியதாவது: அதிகளவு பாதிப்பை கொண்டுள்ள 46 மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகளவில் சார்ந்து இருக்க வேண்டும். அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் முகாம்களை அமைத்து தடுப்பூசிகளை போடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களை உடனடியாக தனிமைப்படுத்தவும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்களையும் பரிசோதித்து தனிமைப்படுத்த 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறும் அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தின் முக்கிய நடவடிக்கையாக கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு 5 அம்ச திட்டம் ஒன்றை மத்திய அரசு அப்போது அறிவித்தது.

அந்த 5 அம்ச திட்டம் வருமாறு:

1) பரிசோதனைகளை மிக அதிகளவில் நடத்துதல்.

2) பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் தனிமைப்படுத்தி அவர்களின் தொடர்புகளை கண்டறிதல்.

3) பொது மற்றும் தனியார் சுகாதார வளாகங்களை மீண்டும் தயார்நிலையில் வைத்தல்.

4) சரியான கோவிட்-19 நடத்தை விதிமுறையை உறுதி செய்தல்.

5) அதிகளவில் பாதிப்புகள் பதிவாகி வரும் மாவட்டங் களில் தடுப்பு மருந்து வழங்கு வதற்கான இலக்கு சார்ந்த அணுகுமுறை ஆகியவையே இந்த 5 அம்சத் திட்டம் ஆகும்.

இதனை தீவிரமாக செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது

மேலும், மாநிலங்கள் கரோனா கால விதிமுறைகளை பின்பற்றா தவர்களுக்கு கடுமையான அப ராதம் விதிக்குமாறும் அறிவுறுத் தப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளி யிட்டது. அதில் கூறியுள்ளதாவது:

70 சதவீத பாதிப்புகளை கரோனா கால விதிமுறைகளை பின்பற்ற செய்து கட்டுப்படுத்த முடியும். முன்னுரிமை பிரிவினருக்கு தடுப் பூசிகளை போடுவதில் கவனம் செலுத்தவேண்டும். சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் ஆகிய 4 இடங்களில் உள்ள தடுப்பூசி கிடங்குகளில் போதுமான தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x