Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

புதிதாக 2,194 பேருக்கு கரோனா தொற்று : முதியவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 2,194 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,285, பெண்கள் 909 என மொத்தம் 2,194 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 833 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 79,473 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 36,911 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 53,733 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 439 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,270பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 5,198 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 13,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவ மனைகளில் முதியவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,670ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,230 பேர் இறந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x