Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM

தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் :

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக காரைக் காலில் நேற்று மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். காரைக் கால் ஆட்சியர் அலுவலக வாயிலிலிருந்து தொடங்கிய ஓட்டத்தை, காரைக்கால் மாவட்ட தேர்தல் பார்வையாளர் (கணக்கு) எஃப்.ஆர்.மீனா, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஸ்வீப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷெர்லி, முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.அல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x