Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

தேர்தல் பிரச்சாரத்தின்போது - கண்ணியக் குறைவாக பேசுவதை தவிர்க்க வேண்டும் : நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தேர்தல் பிரச்சாரத்தின்போது, கண்ணியக் குறைவான சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்றுநிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி பற்றி திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா தவறான கருத்துகளை தெரிவித்தார் என்றும், அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கவேண்டும் என்றும் கோரி, தமிழகதலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹூவிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆ.ராசாவின் பேச்சை பாமக நிறுவனர் ராமதாஸும் கண்டித்துள்ளார்.

இ்ந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவாகப் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்றுகட்சியினருக்கு திமுக தலைவர்ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மக்களிடையே பிரச்சாரம் செய்யும்போது திமுகவின் மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவதை கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும். அத்தகையபேச்சுகளை திமுக தலைமை ஒருபோதும் ஏற்காது. அண்ணா வலியுறுத்திய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்க வேண்டியது கண்ணியமாகும்.

திமுக கூட்டணியின் வெற்றி மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சியினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி, ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்துவெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும்அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம்ஈடேறாத வகையில், கவனத்துடன்பேசவேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x