Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM
மும்முனை மின்இணைப்பு வழங்கும் அதிகாரத்தை உதவிப் பொறியாளருக்கு வழங்கி மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
மின்இணைப்பு, மின்விநியோகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஒவ்வொரு பதவிஅந்தஸ்தில் உள்ள பொறியாளருக்கும் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அதிகாரம் மாற்றம்
இந்நிலையில், மின்வாரியம் இந்த அதிகாரங்களில் சில மாற்றங்களை செய்து உள்ளது. இதன்படி, ஒவ்வொரு பொறியாளருக்கும் வழங்கப்பட்டு உள்ள அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, வீடுகளுக்கு மும்முனை மின்இணைப்பு வழங்கும் அதிகாரம் இதுவரை உதவி செயற் பொறியாளரிடம் இருந்து வந்தது. தற்போது, இந்த அதிகாரம் உதவிப் பொறியாளருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல், தாழ்வழுத்தப் பிரிவில் புதிய மின்இணைப்பு, தற்காலிக மின்இணைப்பு வழங்குவது தொடர்பாக, 50 கிலோ வாட்வரை ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் உதவிப் பொறியாளருக்கு வழங்கப்பட்டு உள்ளது. செயற்பொறியாளருக்கு 50 கிலோ வாட் முதல் 150 கிலோ வாட் வரை ஒப்புதல் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், மின்பகிர்மானக் கழக இயக்குநர், மேற்பார்வை பொறியாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் ஆகியோருக்கும் ஏற்கெனவே உள்ள அதிகாரங்களை உயர்த்தி மின்வாரியம் தற்போது உத்தரவிட்டு உள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT