Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

6 நாட்களில் 1.8 லட்சம் பேருக்கு புதிதாக கரோனா தொற்று - மகாராஷ்டிராவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு :

கேரளா, மகாராஷ்டிரா, குஜராத்,கர்நாடகா, தமிழகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் தினசரி கரோனாவால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,118 ஆக உள்ள நிலையில் அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 36,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.62,685 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்றுமட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53,795 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே, அமராவதி மாவட்டங்களில் ஏற்கெனவே இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் தாக்கரே, மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

இரவு 8 முதல் காலை 7 மணி வரை

மாநிலம் முழுவதும் உள்ள வர்த்தக வளாகங்கள், மால்களும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்படும்.

மகாராஷ்டிராவில் கடந்த 6 நாட்களில் மட்டும் 1.8 லட்சம் பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 608 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 6 நாட்களில் மட்டும் மும்பையில் 26,765 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் கடந்த 24-ம் தேதி முதல் 5 ஆயிரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மார்ச் 24-ம் தேதி மட்டும் 5,190 பேர் பாதிக்கப்பட்டனர்.

2,82,451 பேர் சிகிச்சை..

கடந்த ஆண்டு அமல்படுத்தப் பட்ட பொது முடக்கத்துக்குப் பிறகுஇந்த ஆண்டு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் தற்போது 2,82,451 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து மகாராஷ் டிராவில் ஹோலி, புனித வெள்ளி, ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x