Published : 28 Mar 2021 03:18 AM
Last Updated : 28 Mar 2021 03:18 AM

பாரிவேட்டை பெருமையை மீட்பேன் அதிமுக வேட்பாளர் உறுதி :

திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருதுஅழகுராஜ் சிங்கம்புணரி அருகே மூவன்பட்டி, கருப்பர்கோவில்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஏழைப்பெண்களுக்கு தங்கம் என்பது கனவாக இருந்தது. இதனால் படித்த ஏழை பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இத்தொகுதியில் 15 ஆண்டுகளாக திமுகவின் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு வாய்ப்பு கொடுத்த நீங்கள், சின்னக் கருப்பனாகிய எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்.

பாரம்பரியமிக்க பாரிவேட்டை பெருமையை மீட்டுக் கொடுப்பேன். என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x