Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

தேர்தல் நிதி பத்திரம் : வெளியிட தடை இல்லை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் நிதி பத்திரம் வெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாதுஎன உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தேர்தல் நிதி பத்திரங்கள் என்பவை கட்சிகளுக்கு நன்கொடை வழங்க விரும்புபவர்களுக்காக வெளியிடப்படுகின்றன. இதை தனிநபரோ, நிறுவனமோ அல்லது கூட்டமைப்போ வாங்க முடியும். பாரத ஸ்டேட் வங்கி இந்தத்தேர்தல் பத்திரங்களை வழங்குகின்றன. இந்தப் பத்திரங்கள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 10 வரைவெளியிடப்பட உள்ள நிலையில் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என ஜனநாயக சீர்திருத் தங்களுக்கான தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. அதில் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வரும் வரை பத்திர வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பத்திர வெளியீடுகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அதற்குத் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது.

மேலும் ஏற்கெனவே இதுதொடர்பாக சில இடைக்கால உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு வந்த நன்கொடைகள் குறித்த விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்கவேண்டுமென உத்தரவிடப் பட்டுள்ளது. எனவே தடை விதிக்க முடியாது எனக் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x