Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

கவுண்டம்பாளையம் தொகுதியில் : திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு :

கோவை: மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.கிருஷ்ணன் உறுதியளித்தார். அவர் நேற்று துடியலூர், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், சமத்துவபுரம், அப்பநாயக்கன்பாளையம், கலைஞர் நகர், குமாரசாமி அவென்யூ, மீனாட்சி கார்டன், உழைப்பாளர் வீதி, டாக்டர் அம்பேத்கர் வீதி, கலைமகள் கார்டன், முத்து நகர், சக்தி அவென்யூ, சேரன் காலனி உட்பட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, "என்னை வெற்றி பெறச் செய்தால், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் தீர்வு ஏற்படுத்தித் தருவேன்" என்று வாக்குறுதி அளித்தார். மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x