Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

வங்கி பணம் ரூ.51 லட்சம் திரும்ப ஒப்படைப்பு :

திருப்பூர்: திருப்பூர் - மங்கலம் சாலை எஸ்.ஆர். நகர் பகுதியில் ஏவிபி லே-அவுட் காந்தி நகர் முகவரியில் சிஎம்எஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம், வங்கியின் ஏடிஎம் நிறுவனங்களுக்கு பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டது. இதையடுத்து, மங்கலம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையான கண்காணிப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக வந்த நிறுவனத்தின் வாகனத்தை சோதனையிட்டதில், ரூ. 51 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை கைப்பற்றி, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவக்குமார் முன்னிலையில் ஒப்படைத்தனர். விசாரணையில், மொத்தமுள்ள ரூ.63 லட்சத்தில், மங்கலம் சாலை செல்லம் நகர் பகுதியில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.12 லட்சம் செலுத்திவிட்டு, எஞ்சிய தொகையில் ரூ.51 லட்சம் இருப்பதாக கூறி, அதற்கான ஆவணங்களை தேர்தல் அலுவலரிடம் தனியார் நிறுவனம் ஒப்படைத்தது. இதையடுத்து, நிறுவனத்தின் பணப் பொறுப்பாளர் பி.சிவக்குமாரிடம் ரூ. 51 லட்சம் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x