Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM
புதுச்சேரியில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:
தாழ்ந்த நிலையிலுள்ள புதுச்சேரியை தலை நிமிர செய்கிறது பாஜக. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரப் போவது உறுதி. மோடி பார்வை புதுச்சேரியின் மீது பட்டுள்ளதால் வளர்ச்சி அடையும். கடந்தமுறை காங்கிரஸில் தேர்தல் அறிக்கையை முன்னாள் முதல்வராக உள்ள நாராயணசாமி 2016-ல் என்னுடைய பெயரில் வெளியிட்டார். அன்று ஒரு மகத்தான வெற்றியை புதுவை மக்கள் கொடுத்தார்கள். அந்த வாக்குறுதிகளில் எதையாவது அவரால் நிறைவேற்ற முடிந்ததா என்றால் எதுவும் இல்லை. அதற்கு முக்கியக் காரணம் துணைநிலை ஆளுநருடன் அவர் போட்ட சண்டை தான். முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் தனிப்பட்ட ஈகோவால் புதுச்சேரியின் வளர்ச்சி 20 ஆண்டுக்கு பின்நோக்கி சென்றுள்ளது.நாராயணசாமியை நம்ப மக்கள் தயாராக இல்லை. என்று குறிப்பிட்டார்.
முன்னதாக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், “பின்நோக்கி சென்றுள்ள புதுச்சேரியை குஜராத் போல் வளர்ச்சி அடைய செய்வோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி. மாநிலத்தில் கூட்டாட்சி என்று செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT