Published : 26 Mar 2021 03:15 AM
Last Updated : 26 Mar 2021 03:15 AM

ஹரித்வார் கும்பமேளா காலம் ஒரு மாதமாக குறைப்பு :

டேராடூன்

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா நடைபெறுவது வழக்கம். சுமார் மூன்றரை மாதங்களுக்கு நடைபெறும் இவ்விழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடுவர். கடைசியாக 2010-ல் கும்ப மேளா நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், “ஹரித்வார் நகரில் கங்கை நதிக்கரையில் இந்த ஆண்டு கும்ப மேளா வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். இதில் ஏப்ரல் 12, 14 மற்றும் 27 ஆகிய தேதிகள் புனித நீராடலுக்கு முக்கிய நாட்களாக இருக்கும். கும்ப மேளாவில் பங்கேற்க வருபவர்கள் கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும். அந்த சான்றிதழ் 72 மணி நேரத்துக்குள் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x