Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமிக்கலாம் என அடுத்த மாதம் ஓய்வுபெறவுள்ள தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பரிந்துரை செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் 47-வதுதலைமை நீதிபதியாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 18-ம்தேதி எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்றர். இவர் வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பாப்டேவுக்கு சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், தனக்குப் பிறகு என்.வி.ரமணாவை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என மத்திய அரசுக்கு பாப்டே பரிந்துரை செய்துள்ளார். பாப்டேவுக்கு அடுத்தபடியாக, மிகவும் மூத்த நீதிபதியாக ரமணா உள்ளார். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரமணா, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி வரை பதவியில் இருப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT