Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

துப்பாக்கி சுடுதல்: : பிரதாப், ஷிங்கி யாதவுக்கு தங்கம் :

புதுடெல்லி

டெல்லியில் நடைபெற்று வரும்உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் இறுதி சுற்றில் 462.5 புள்ளிகள் குவித்துஉலகத்தரவரிசையில் முதலிடத் தில் உள்ள ஹங்கேரியின் இஸ்த் வான் பெனியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். பெனி 461.6 புள்ளிகள் பெற்றார்.

மகளிருக்கான 25 மீட்டர்பிஸ்டல் பிரிவில் இந்தியா ஒட்டுமொத்தமாக 3 பதக்கங்களையும் அள்ளியது. இறுதி சுற்றில் ஷிங்கியாதவ், ராகி சர்னோபாத் ஆகியோர் தலா 32 புள்ளிகள் குவித்தனர். இதைத்தொடர்ந்து தங்கப் பதக்கம் யாருக்கு என்பதை தீர்மானிக்க ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஷிங்கி யாதவ் இலக்கை 4 முறை தாக்கி தங்கப் பதக்கம் வென்றார். ராகி சர்னோபாத் 3 முறை மட்டுமே இலக்கை தாக்கினார். இதனால் அவர், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x