Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM
கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி லட்சுமி, மாநகர மத்திய குற்றப்பிரிவில் சில தினங்களுக்கு முன் அளித்த புகாரில், “எனது கணவரும், அவரது நண்பர் சந்திரமௌலியும் கூட்டாக சேர்ந்து முதலீடு செய்து, லாபத்தில் சரிபாதி என்ற அடிப்படையில் தேஜஸ்வனி என்ற பெயரில் கோல்டு கவரிங் நகை தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், எனது கணவர் கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி உயிரிழந்து விட்டார். எனது கணவரின் அலைபேசியை வாங்கிய சந்திரமௌலி, அதே ஜனவரி மாதம் 19-ம் தேதி நிறுவனத்தை நடத்த கையெழுத்து வேண்டும் எனக் கூறி பல ஆவணங்களில் என்னிடம் கையெழுத்து வாங்கி சென்றார். பிறகு அந்த ஆவணங்களை வைத்து, அவரது மனைவி நாகலட்சுமி என்பவரை தொழில் பங்குதாரராக மோசடியாக சேர்த்துவிட்டார். நியாயமாக எனக்கு கிடைக்க வேண்டிய பங்கை தராமல் ஏமாற்றிவருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
புகாரின் பேரில், விசாரணை நடத்திய மாநகர மத்திய குற்றப் பிரிவினர், சந்திரமௌலியை நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT