Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM

காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் :

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற பொறுப்பாளர்கள் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பொன்னேரி (தனி) தொகுதிக்கு டி.எல். சதாசிவலிங்கம் உள்ளிட்ட 6 பேரும், வேளச்சேரி தொகுதிக்கு டி.என். முருகானந்தம் உள்ளிட்ட 9 பேரும், ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதிக்கு எம். வசந்தராஜ் உள்ளிட்ட 6 பேரும், சோளிங்கர் தொகுதிக்கு வாலாஜா ஜெ. அசேன் உள்ளிட்ட 5 பேரும், ஊத்தங்கரை (தனி) தொகுதிக்கு அகா. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேரும், கள்ளக்குறிச்சி (தனி) தொகுிதிக்கு ஆர். ரங்கபூபதி உள்ளிட்ட 6 பேர் என்று 25 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜய் வசந்துக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற ராபர்ட் புரூஸ், ஆர். ராதாகிருஷ்ணன், எம்.எஸ். காமராஜ். ஆஸ்கார் ப்ரெடி, வி.எம் பினுலால் சிங், லாரன்ஸ், கே.ஜி. ரமேஷ்குமார், சீனிவாசன், எஸ். காமராஜ், உதயம், ஜான் பென்னடிக்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x