Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் 37 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன.
இதில் ரூ.1,10,61,134 ரொக்கம், தங்கம் 2 கிலோ 294 கிராம், வெள்ளி 3 கிலோ 829 கிராம், அயல்நாட்டு நோட்டுகள் 54 இருந்தன.
உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, உதவி ஆணையர்கள் செ.மாரியப்பன் (ஜம்புகேஸ்வரர் கோயில்), சு.ஞானசேகரன் (வெக் காளியம்மன் கோயில்), கோயில் மேலாளர் ம.லட்சுமணன், அறநிலையத்துறை ஆய்வர் கு.தமிழ்ச்செல்வி மற்றும் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இதற்கு முன்னதாக மார்ச் 9-ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT