Published : 24 Mar 2021 03:15 AM
Last Updated : 24 Mar 2021 03:15 AM
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரியும் இணைந்து காந்திய சிந்தனைக் கருத்தரங்கை நடத்தின.
முதல்வர் தேன்மொழி தலைமை வகித்தார். அருங்காட்சியக இயக்குநர் நந்தாராவ் வாழ்த்துரை வழங்கினார்.
சர்வோதயம், அகிம்சை, கல்வி, சமயம், அரசியல் சிந்தனை குறித்து பேராசிரியர்கள் மாரிச்செல்வம், நடராஜன், முனைவர் வெங்கடேஷ் வரன், ஜெயக்குமார், கிருஷ்ணராஜ், முனைவர் ஜெயச்சந்திரன் பேசினர்.
காந்திய கல்வி நிறுவன முதல்வர் தேவதாஸ், பேராசிரியர் தேவ ஆசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT