Published : 24 Mar 2021 03:16 AM
Last Updated : 24 Mar 2021 03:16 AM
ஆம்பூர் அருகே புளிய மரத்திலிருந்து தவறி விழுந்தவர் நேற்று உயிரிழந்தார்.
ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சி சுட்ட குண்டாவை சேர்ந்தவர் சிகாமணி (58). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் நேற்று புளி பறிக்க சென்றார்.
அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிகாமணி உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT