Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

தொகுதிவாரியாக அனுமதி பெற்று - அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பிரச்சாரம் செய்யலாம் :

பதிவு மட்டுமே செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க முடியாது. ஆனால் தொகுதிவாரியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள்சக்தி கட்சி சார்பில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில் ‘‘எங்கள் கட்சி பதிவு செய்யப்பட்டதாகும். ஆனால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த தேர்தலில் பலதொகுதிகளில் போட்டியிடுகிறோம். எனவே, தமிழகம் முழுவதும்பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கவேண்டும்’’ என்று கோரப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், ‘‘பதிவு மட்டுமே செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல்கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கமுடியாது. ஆனால் தொகுதிவாரியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம். இதுதொடர்பாக கடந்தமார்ச் 15-ம் தேதியே பதில் அளிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் மனுதாரர் தரப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கூறிவழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x