Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM
நகர்: தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம், மனிஹால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலையில் அப்பகுதியை சுற்றிவளைத்தனர். இதையடுத்து அவர்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் சில மணி நேரத்தில் தீவிரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது.
தீவிரவாதிகளை சரண் அடையும்படி பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டனர். என்றாலும் இதை அவர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்கள் நால்வரும் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காஷ்மீர் ஐ.ஜி. விஜய்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT