Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

ஆரத்தி எடுத்தோருக்கு பணப் பட்டுவாடா தேர்தல் அதிகாரிகள் விசாரணை :

சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில்நாதன், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் குணசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இரு தினங்களுக்கு முன் காளையார்கோவில் பகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் பிரச்சாரம் செய்தார்.

கல்லல் சாலையில் அவர் பிரச்சாரம் செய்துவிட்டுச் சென்றதும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தோர், கூட்டத்துக்கு வந்த பெண்களுக்கு அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்தனர். இதில் சிலருக்கு பணம் முறையாகச் சென்று சேராததால் வாக்குவாதம் செய்தனர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பினார். இதையடுத்து பணப் பட்டுவாடா குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x