Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2 மாதங்களாக கரோனா வைரஸ் பரவுவது மீண்டும் அதி கரித்து வருகிறது. குறிப்பாக மகா ராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, மத் தியபிரதேசம், பஞ்சாப், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகி றது. தொடர்ந்து 3-வது நாளாக, நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அமித் ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் கரோனா தொற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள னர். இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து அவர், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார்.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவ மனை வெளியிட்ட செய்திக்குறிப் பில், "மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடந்த 19-ம் தேதி கரோனா பரிசோதனை நடத் தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள் ளார். தற்போது ஓம் பிர்லாவின் உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT