Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM
செல்போன்கள் விற்பனை செய்வதாக வலைதளத்தில் போலி விளம்பரம் செய்து, பண மோசடியில் ஈடுபட்டவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவான்மியூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34). இவர் செல்போன் விற்பனை தொடர்பாக ஓஎல்எக்ஸ் வலைதளத்தில் பதிவிடப்பட்டிருந்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அந்த செல்போனை வாங்க, விளம்பரம் கொடுத்த நபரை அணுகினார். எதிர் முனையில் பேசிய நபர் தன்னை சிந்தாதிரிப்பேட்டையில் சந்தித்து செல்போனை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து அந்த நபர் கூறியபடி ரூ.10 ஆயிரத்தை கொடுத்து செல்போனை வாங்கி பார்த்தபோது அது வேலை செய்யாத சீனா மாடல் போன் என்பதும், விளம்பரத்தில் பார்த்த செல்போன் இல்லை எனவும் தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது, தண்டையார்பேட்டை, நோதாஜி நகரைச் சேர்ந்த அப்துல் மஜீத் (40) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT