Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM
கொடைக்கானலில் நேற்று ஒரு மணிநேரம் கோடைமழை பெய்தது. இதனால் மலைப் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமை நிலவியது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக 24 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென மழை பெய்யத் தொடங்கியது. பகல் 2 மணி முதல் பெய்யத் தொடங்கி மாலை 3 மணி வரை தொடர்ந்து பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. கோடை மழையால் தற்போது வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் குறைந்து 20 டிகிரி செல்சியசாக உள்ளது.
இரவில் குறைந்த பட்சமாக 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT