Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

ஏப்ரல் 1 முதல் மருந்து விலை : உயர்கிறது :

மருந்து உற்பத்தியாளர்கள் மருந்துகளின் விலையை ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் விலையை 0.5 சதவீதம் உயர்த்திக்கொள்ள தேசியமருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மருந்துகளின் உற்பத்தி செலவு 15 சத வீதம் முதல் 20 சத வீதம் வரைஉயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மருந்துகளின் விலையை 20 சதவீதம் வரை உயர்த்த அனுமதிக்குமாறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் நிலவுகிறது. அதேபோல போக்குவரத்து மற்றும் பேக்கிங் செலவு ஆகியனவும் உயர்ந்துள்ளன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மருந்துகளின் விலையை ஒரு முறை உயர்த்த அனுமதிக்குமாறு மத்திய அரசை நிறுவனங்கள் வலியுறுத்த உள்ளன.

பெரும்பாலான மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x