Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM

வேலூர் சிறையில் : நளினி-முருகன் சந்திப்பு :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது மனைவி நளினி, பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கு நேற்று காலை முருகன் அழைத்துச் செல்லப் பட்டார். காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இருவரின் சந்திப்பும் நடைபெற்றது. அதன் பிறகு முருகனை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x